குப்பைகள் அகற்றப்பட்டது

Update: 2023-09-27 08:48 GMT

நாகர்கோவில் சற்குண வீதியில் வறீது தெரு உள்ளது. இந்த தெருவில் இரவு நேரம் வேறு பகுதியில் உள்ள சிலர் வீடு, கடைகளில் இருந்து கழிவுகளை சாலையோரம் கொட்டி விட்டு சென்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கு கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டதுடன், குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாசகம் அடங்கிய பேனரையும் சுவற்றில் ஒட்டியுள்ளனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

-பவுஸ்டின், சற்குணவீதி, நாகர்கோவில்.

மேலும் செய்திகள்