ரோட்டில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

Update: 2023-03-15 11:54 GMT

வேலூர் கருகம்புத்தூரில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையோரம் மர்ம நபர்கள் மாட்டு இறைச்சி, கோழி இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளிட்டவற்றை மூட்டைகளாக அப்பகுதியில் கொட்டுகின்றனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசி வருகிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்