வந்தவாசியில் காஞ்சீபுரம் சாலையில் உள்ள ஏரிக்கரையில் கோழி, ஆடு, மாடு இறைச்சி கழிவுகள் மூட்டை மூட்டையாகக் கொட்டப்படுகிறது. இதனால் ஏரி நீர் மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏரியில் வீசப்படும் கழிவுகளை தடுக்க வேண்டும். இல்லையேல், எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.
-ஆனந்தன், வந்தவாசி.