சுடுகாட்டில் குப்பைகள் கொட்டும் அவலம்

Update: 2022-11-02 10:48 GMT

திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோடு நகராட்சி சார்பில் பராமரிக்கப்படும் மின்சார சுடுகாடு உள்ளது. இதன் உள்ளேயே மங்கும் குப்பை, மக்காத குப்பையை பிரிப்பதற்காக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுடுகாட்டுக்குள் பிணத்தை புதைக்க உள்ளே செல்வார்கள் சிரமப்படுகின்றனர். இதேபோல் இதற்கு பக்கத்தில் உள்ள சுடுகாட்டிலும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அய்யாத்துரை, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்