ஏரியில் வீசப்படும் குப்பைகள்

Update: 2023-03-29 16:46 GMT

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பில்லாஞ்சி ஏரிக்கரை ஓரம் முழுவதும் குப்பைகளை கொட்டி உள்ளனர். குப்பைகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குப்பைகளை அகற்ற பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுநாள் வரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏரி மாசுபடுவதால் குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும் செய்திகள்