குப்பைகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாக கொட்ட வேண்டும்

Update: 2023-03-29 16:30 GMT

ஆரணி கொசப்பாளையம் மைதானத்தில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து வந்து ஒரே இடத்தில் கொட்டுகிறார்கள். குப்பைகளை உடனடியாக அகற்றாததால் மாடுகள், நாய்கள், பன்றிகள் வந்து கிளறி விடுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் காற்றில் பறக்கின்றன. குப்பைகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாக கொட்ட நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அப்துல்சாஹிப், ஆரணி. 

மேலும் செய்திகள்