வேலூர் கோட்டைக்கு வெளிமாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் சுற்றிப்பார்க்க வந்து செல்கின்றனர். அவற்றுள் ஒரு சிலர் சாப்பிடும் உணவுப் பொருட்களை சாப்பிட்டு முடித்ததும் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் போட்டு விட்டு செல்கின்றனர். இதனால் கோட்டையைச் சுற்றிப்பார்க்க வருபவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெங்கடேசன், வேலூர்.