குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-11-02 17:00 GMT

திருப்பத்தூர் நகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட டி.பி. புரான் தெருவில் குப்பைகள் கொட்டப்பட்டு மூட்புதர்கள் வளர்ந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பலமுறை நகராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைகளை அகற்ற ேவண்டும். அங்கு வளர்ந்துள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்தி பூந்தொட்டி வைத்து பராமரிக்க வேண்டும். நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மாதேஸ்வரன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்