கால்வாயில் கிடக்கும் குப்பைகள்

Update: 2024-01-28 17:26 GMT

பேரணாம்பட்டு பகுதியில் குடியாத்தம் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் கிடக்கிறது. இதனால் கால்வாயில் கழிவுநீர் சரியாக ஓடாமல் தேங்கி உள்ளது. தேங்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயில் கிடக்கும் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி தூர்வார வேண்டும்.

-நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு.

மேலும் செய்திகள்