சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-11-20 10:51 GMT

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளில் சேகரிக்கும் குப்பைகளை பேரூராட்சிக்கு தெரியாமல் கொண்டு சென்று தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஒரு கோவிலுக்கு செல்லும் வழியில் மலைபோல் குவித்து வைத்துள்ளனர். அங்கு வரும் கால்நடைகள் குப்பைகளை கிளறி விடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. பேரூராட்சி அலுவலகம் அருகே திடக்கழிவு மேலாண்மை கட்டிடத்தில் கொட்டினால் அங்கு குப்பைகளை பிரித்தெடுக்கலாம். அதை விட்டு விட்டு சாலையோரம் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.

-பாஸ்கரன், பள்ளிகொண்டா. 

மேலும் செய்திகள்