ஏரி கரையில் கொட்டப்படும் கழிவுகள்

Update: 2023-01-01 17:47 GMT

திருப்பத்தூர் பஸ் நிலையத்தையொட்டி பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நிரம்பி உபரி நீர் கடந்த 3 மாதங்களாக வெளியேறி வருகிறது. இந்த நிலையில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளும், கோழிக் கழிவுகளும் ஏரிக்கரையில் கொட்டப்படுகிறது. இதனால் ஏரிக்கரையில் துர்நாற்றம் வீசுகிறது. பல்வேறு நோய் பரவும் நிலை உள்ளது. எனவே ஏரியில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தட்சணாமூர்த்தி, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்