ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள், குப்பைகள்

Update: 2023-05-03 16:57 GMT

நெமிலி கொசஸ்தலை ஆற்றில் கோழி இறைச்சி, மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியின் வழியே செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்வோருக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் நெமிலி பேரூராட்சி குப்பைகளும் ஆற்றில் கொட்டப்படுகிறது. இது சம்பந்தமாக புகார் அளித்தும் எந்தப் பலனும் ஏற்படவில்லை. உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சாந்தி பாண்டியன், நெமிலி.

மேலும் செய்திகள்