பயணிகள் நிழற்குடைக்குள் குப்பைத்தொட்டி

Update: 2022-09-06 12:01 GMT



நாட்டறம்பள்ளி, புதுப்பேட்டை செல்லும் சாலையில் அக்ரஹாரம் அருகே மோட்டூர் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. அதன் அருகிலேயே குப்பை தொட்டி உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. நிழற்குடை பழுதடைந்துள்ளதாலும், அங்கேயே குப்பைத்தொட்டி இருப்பதாலும் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடையை சரி செய்து, குப்பை தொட்டியை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்