குப்பையால் சுகாதார சீர்கேடு

Update: 2022-08-11 15:01 GMT

குப்பையால் சுகாதார சீர்கேடு

பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தில் இடுவாய், திருப்பூர், வேலம்பாளையம் செல்லும் ரோடுகள் சந்திக்கும் நால்ரோடு உள்ளது. இந்த நால்ரோடு சந்திப்பில் ரோட்டோரங்களில் சிலர் குப்பைகளை அதிகளவில் கொட்டி வருகின்றனர். நால்ரோடு சந்திப்பில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. சில நேரங்களில் குப்பைகளில் தீ வைத்துவிடுவதால் ஏற்படும் புகை மூட்டத்தால் கண்ணெரிச்சல் உள்ளிட்ட வியாதிகள் வருகிறது. எனவே அதிகாரிகள் இங்கு குப்பைகளை கொட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விதெரிவித்தனர்.

அர்ஜூனன், பல்லடம்.9942051200

மேலும் செய்திகள்