சாலையா? குப்பைத்தொட்டியா?

Update: 2023-01-29 16:37 GMT

சாலையா? குப்பைத்தொட்டியா?

 திருப்பூர்-ஊத்துக்குளி சாலை குளத்துப்பாளையம் அருகே சாலையோரம் கொட்டிய குப்பையால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர். இந்த சாலை திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி, ஈரோடு செல்லும் முக்கிய சாலையாகும். இங்கு போக்குவரத்து எப்போதும் மிகுந்து காணப்படும். அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் சேகரமாகும் குப்பைகள் சாலையோரம் கொட்டப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைவதுடன் சில சமயங்களில் பிளாஸ்டிக் கவர்களால் வழுக்கி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும் குப்பையால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து குப்பையை அப்புறப்படுத்த வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமார், திருப்பூர்.

மேலும் செய்திகள்