வாய்க்காலில் கொட்டப்படும் கழிவுகள்

Update: 2023-01-22 15:26 GMT

வாய்க்காலில் கொட்டப்படும் கழிவுகள்

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அய்யம்பாளையம் பகுதியில் பி.ஏ.பி. கிளை வாய்க்கால் செல்கிறது. அந்த வாய்க்கால் முழுவதும் குப்பைகளும், கழிவுகளும் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு காண்பபடுகிறது. பி.ஏ.பி பாசன திட்டத்தில் தண்ணீர் திறந்து விட்டுள்ள நிலையில் வாய்க்கால் இப்படி கழிவுகளால் அடைபட்டு உள்ளது வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வாய்க்காலில் உள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர்.

-ராஜ், பல்லடம்.

மேலும் செய்திகள்