குப்பையால் சுகாதார சீர்கேடு

Update: 2022-12-21 18:12 GMT

குப்பையால் சுகாதார சீர்கேடு

பல்லடம்- திருப்பூர் மெயின் ரோட்டில் மகாலட்சுமி நகர் உள்ளது. இந்த பகுதியில் பஸ் நிறுத்தம் அருகே பள்ளி மற்றும் குடியிருப்புகள், கோவில் உள்ளிட்டவை உள்ளன. இந்த பகுதியில் சாலையோர பள்ளத்தில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு உள்ளன. அவைகள் உடனுக்குடன் அகற்றப்படாததால் காற்றில் பறக்கிறது. நாய்கள் அதிகளவில் குப்பையை கிளறிவருவதால் பலரும் அவதிப்படுகிறார்கள். மழைநேரத்தில் இங்குள்ள குப்பையில் மழைநீர் அதிகளவு தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. சாலையில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ராஜ், பல்லடம்.

மேலும் செய்திகள்