குப்பைகளுக்கு தீ வைக்கும் அவலம்

Update: 2023-04-05 17:01 GMT

குடியாத்தம் நகராட்சி 14-வது வார்டு அருணாசலநகர் பகுதியில் குப்பைகளை சரியாக சேகரிப்பது இல்லை. அந்தப் பகுதியில் கிடக்கும் குப்பைகளை மர்மநபர்கள் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. குழந்தைகள், முதியோர் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகின்றனர். கண் எரிச்சலும் ஏற்படுகிறது. குப்பைகளை முறையாக சேகரிக்க வேண்டும். குப்பைகளுக்கு தீ வைப்பதை தடுக்க வேண்டும்.

-அ.சந்தோஷ், குடியாத்தம். 

மேலும் செய்திகள்