குப்பைகள் தேங்கும் சுரங்க நடைபாதை

Update: 2022-09-19 11:03 GMT

வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகில் இருந்து ஆர்.டி.ஓ. சாலை செல்லும் சுரங்க நடைபாதையில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், போதை வஸ்து பாக்கெட்டுகள் போன்றவை பொதுமக்களால் வீசி எறியப்பட்டுள்ளன. குப்பைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சந்தானம், சத்துவாச்சாரி. 

மேலும் செய்திகள்