கட்டுமான பொருட்களால் இடையூறு

Update: 2022-12-07 17:31 GMT

கட்டுமான பொருட்களால் இடையூறு

திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே சிக்கண்ண செட்டியார் வீதியில் இருந்து குளி செட்டியார் வீதிக்கு ஒரு குறுக்கு பாதை செல்கிறது. இந்த வீதியில் உள்ள ஒரு கடையில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதன்காரணமாக இப்பகுதியில் பாதையை அடைத்தபடி கட்டுமான பொருட்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவிலான கடைகள் இருப்பதாலும், பழைய பஸ் நிலையம் அருகில் இருப்பதாலும் இவ்வழியாக தினமும் வாகனங்கள் அதிகமாக செல்லும் நிலையில் இங்கு பாதை அடைக்கப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. எனவே, இங்கு கொட்டி வைக்கப்பட்டுள்ள கட்டுமான பொருட்களை ரோட்டின் ஓரமாக போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மஞ்சுநாதன், ஜம்மனை வீதி, திருப்பூர்

மேலும் செய்திகள்