ரோட்டில் கொட்டப்படும் குப்பையால் துர்நாற்றம்

Update: 2022-08-16 10:10 GMT



திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில், காஞ்சீபுரம்- வந்தவாசி சாலையில் ஆங்காங்கே குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத் தொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே குப்பைகளை அகற்றி, மீண்டும் குப்பை கொட்டாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


மேலும் செய்திகள்