வேலூர் கோட்டை பூங்காவில் அகழிக்கரை ஓரம் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி தீ வைத்து விடுகின்றனர். இதனால் அந்தப் பகுதியே புகை மண்டலமாக காணப்படுகிறது. பூங்காவில் அமரும் பொதுமக்களுக்கும், வெளி மாநில நோயாளிகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதவன், வேலூர்.