தொடர்ந்து எரியும் குப்பை கிடங்கு

Update: 2023-04-16 16:06 GMT

திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் உள்ள நகராட்சி குப்பைக்கிடங்கில் பல நாட்களாக தீ எரிந்து வருகிறது. அதில் இருந்து வெளியேறும் புகையால் அந்த பகுதி குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும் பலருக்கு தொடர் இருமல் போன்ற உடல்நல குறைபாடுகளும் ஏற்பட்டு உள்ளது. எனவே திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு குப்பைக்கிடங்கில் எரிந்து வரும் தீயை அணைக்க வேண்டும்.

-ராஜா, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்