பொதுமக்கள் அவதி

Update: 2022-08-09 14:03 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி கிழக்குத்தெரு நீர்த்தேக்க தொட்டி அருகில் குடியிருப்பு பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதோடு, கொசுத்தொல்லைகளும் இருக்கிறது. மேலும் துர்நாற்றம் அடிப்பதால் இப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்