திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தமிழ்நாடு வீட்டுவாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இங்கு கொட்டப்படும் குப்பைகள் கால்நடைகளுக்கு உணவாகியும் வருகிறது. இதனால் இந்த சாலையை கடந்து செல்லும் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் இருக்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலை ஓரத்தில் குவிந்திருக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.