
கரூர் மாவட்டம், ரெட்டிப்பாளையம் ஊருக்கு முன் நெடுஞ்சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு, பல மாதங்கள் ஆகியும் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது. இவை காற்று பலமாக அடிக்கும்போது குப்பைகள் காற்றில் பறந்து இப்பகுதி முழுவதும் விழுந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.