குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-07-19 16:56 GMT

 அரியலூரில் இருந்து கோவிந்தபுரம் செல்லும் சாலையில் உள்ள எருத்து காரன்பட்டி கிராம பஞ்சாயத்து குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இந்த குப்பைகள் கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து அடைப்பை ஏற்படுத்துவதுடன் பன்றிகள் இவற்றில் மேய்வதினால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் குப்பை தொட்டி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்