தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2022-12-21 14:57 GMT

நாகையில் தலைமை தபால் நிலையம் மற்றும் ரெயில் நிலையம் பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகளில் இருக்கும். இந்த பகுதியில் சிலர் குப்பைகள் காய்கறி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் கால்நடைகள் அதிகளவில் கூடுகின்றன. இவை அந்த வழியாக செல்பவர்களை முட்டியும்,விரட்டியும் வருகிறது. அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்