குளத்தை சூழ்ந்த குப்பைகள்

Update: 2022-12-21 11:15 GMT

நாகை மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில் புதுக்குளம், பிடாரிகுளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் அந்த பகுதி மக்கள் தங்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். தற்போது இந்த குளங்கள் குப்பை பகுதியாக மாறி உள்ளதால் பன்றிகள் அதிகளவில் உள்ளன. மேலும் குளத்திற்கு தண்ணீர் செல்லும் பகுதி முழுவதும் கழிவு நீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்