குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2022-09-22 11:57 GMT

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள சந்தை பகுதியில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவை முறையான பராமரிப்பின்றி இருப்பதால் குப்பைகள் அந்த பகுதி முழுவதும் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதால் சந்தைக்கு வருபவர்கள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்