குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-13 12:55 GMT

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை பகுதியில் உள்ள சாலையோரத்தில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். மேலும், குப்பைகளால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி குப்பைகளில் இரைதேடி வரும் கால்நடைகளால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்