தர்மபுரி மாவட்டம் நேரு நகரில் அரசு கலை கல்லூரி எதிரே குப்பை தொட்டி உள்ளது. இங்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குப்பை அள்ளாதலால் குப்பை தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும்.