குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-08-22 15:48 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் சாலையில் நடையனூர் பகுதியில் பல்வேறு வகையான கடைகள் உள்ளன. அதேபோல் திருமண மண்டபம் உள்ளது. இங்கு சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுகளை கடைக்காரர்கள் மற்றும் திருமண மண்டபத்தை சேர்ந்தவர்கள் தார் சாலையின் ஓரத்தில் கொட்டி வருகின்றனர். அதேபோல் அப்பகுதியில் உள்ள கடைக்காரர்களும், சாலையோரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள், கப்புகளை கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்