சென்னை கோடம்பாக்கம் சிவன் கோவில் தெருவில் உள்ள திருமண மண்டபத்தின் அருகில் இருக்கும் நடைபாதை நீண்ட நாட்களாக சேதமடைந்து இருக்கிறது. மேலும் நடைபாதையில் குப்பைகளை கொட்டுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி நடைபாதையை புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.