குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-08-20 13:22 GMT
கரூர் மாவட்டம், வெண்ணெய்மலை மெயின் சாலை பகுதியில் மலைப்போல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகள் கால்நடைகள் கிளறி வருவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வாகனங்களில் செல்வோர் மூக்கை பிடித்து கொண்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்