கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சவுடாம்பிகை நகர் 2-வது குறுக்கு தெருவில் சாலையோரம் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதுகுறித்து மாநகராட்சியில் புகார் அளித்தும், குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால், அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். ஆகவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அள்ள, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.