குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-08-17 15:34 GMT
கரூர், அன்னை இந்திரா நகரில் வெங்கமேடு செல்லும் சாலையில் உள்ள ஒரு கழிவுநீர் வாய்க்காலில் குப்பைகள் நீண்ட நாட்களாகவே அகற்றப்படாமல் அப்படியே கிடக்கிறது. இதன் மூலம் துர்நாற்றம் வீசுவதால் அந்தப் பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கைப்பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்