செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாடம்பாக்கம் பகுதியில் உள்ள குடோனில் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த குப்பைகள் கால்நடைகளுக்கு உணவாகியும் வருகிறது. இந்த குப்பைகளில் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் கலந்துள்ளதால், அவை கால்நடைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் வகையில் உள்ளது. எனவே குப்பைகளை உடனடியாக அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.