கடலூர் மஞ்சக்குப்பம் சண்முகம் பிள்ளை தெருவில் சாலையோரம் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதியடைகின்றனர். மேலும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம்.