குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-12 15:58 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கடைத்தெரு பகுதியில் குப்பைகள் சாலையோரத்தில் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குவிந்து கிடக்கும் குப்பைகளை தேடி கால்நடைகள் அதிகளவில்  வருகின்றன. இவை சாலையில் அங்கும், இங்கும் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்