சுகாதார சீர்கேடு

Update: 2022-08-12 15:36 GMT

நாகை மாவட்டம் வெளிப்பாளையம் ஏழை பிள்ளையார் கோவில் தெருவில் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு செல்லும் பாதையில் உள்ள பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்