குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-08-12 12:53 GMT

நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் இருந்து பெரியப்பட்டி செல்லும் சாலையில் தீயணைப்புத்துறை அலுவலகம் உள்ளது. அங்குள்ள வளைவு பகுதியில் அந்த பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுவதால் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. அதை தவிர்க்க குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்