சுகாதார சீர்கேடு

Update: 2022-08-11 12:43 GMT
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையில் உள்ள உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் சிலர் ஏராளமான கோழிக்கழிவுகளையும், மீன் கழிவுகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் அந்தக் கழிவுகளை தின்பதற்கு நாய்கள் கூட்டமாக வந்து திரிகின்றன. இதனால் இந்த கரையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் மிகுந்த அச்சத்துடன் செல்லும் சூழ்நிலை நிலவுகிறது. அங்கு குப்பைகள் மலைபோல் தேங்கி உள்ளன. இதனால் மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்