பள்ளத்தில் குப்பைத்தொட்டிகள்

Update: 2022-08-10 14:29 GMT

அந்தியூர் மைக்கேல்பாளையம் அருகே பொய்யேரிக்கரை அரசு நடுநிலைப்பள்ளி முன்பு 2 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இவை தற்போது அருகே உள்ள பள்ளத்தில் கிடக்கின்றன. இதனால் குப்பைகள் ரோட்டில் கொட்டப்படுகிறது. பலத்த காற்று வீசும்போது குப்பை தூசிகள் பறந்து செல்கின்றன. இது அந்த வழியாக நடந்தும், வாகனங்களில் செல்பவர்கள் மீது படுகிறது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுமக்கன் நலன் கருதி குப்பை தொட்டிகளை எடுத்து ரோட்டில் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்