கரூர் காமராஜ் மார்க்கெட்டில் இருந்து கரூர் ரெயில்வே நிலையம் செல்லும் சாலையில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பைகளை ஆடு மற்றும் மாடுகள் கிளறி மேய்கின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.