தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் கோழி இறைச்சி கடைகள் உள்ளன. அந்த கடைகளில் உள்ள இறைச்சி கழிவுகள் அனைத்தும் பழைய பாலம் வாணியாற்றில் கொட்டுகிறார்கள். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
-சந்துரு, தர்மபுரி.