பெங்களூரு சாந்தி நகர் பகுதியில் இருந்து லால்பாக் பூங்கா செல்லும் சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது. அந்த பஸ் நிறுத்தத்தை அந்த பகுதி மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் குப்பை கழிவுகளை சேகரிக்க வசதியாக குப்பை தொட்டிகள் பஸ் நிறுத்தம் அருகில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குப்பை கழிவுகள் நிரம்பிய நிலையில் இதுவரை மாநகராட்சி அதிகாரிகள் அந்த கழிவுகளை அகற்றாமல் உள்ளனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதன்காரணமாக பஸ் ஏறுவதற்கு வரும் மக்களும், வாகன ஓட்டிகளும் துர்நாற்றத்தால் சிரமம் அடைகின்றனர். எனவே குப்ைப தொட்டியில் குவியும் குப்ைப கழிவுகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்ைக எடுக்குமா?