சென்னை சூளைமேடு, வீரபாண்டிய நகர் 3-வது தெருவில் தெரு விளக்கிற்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை அகற்றும் பணி முடிந்தும் அந்த மரக்கிளை குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பது தொடர்பாக 'தினத்திந்தி' புகார் பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. மாநகராட்சியின் உடனடி நடவடிக்கையால் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டுவிட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் மாநகராட்சியின் சீரிய நடவடிக்கைக்கும் துணைபுரிந்த 'தினத்தந்தி'க்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.