குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-06 11:51 GMT
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதி புலிவலம் எஸ்.எம்.ஏ.நகர் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளால் அந்த பகுதிக்கு அதிகளவில் கால்நடைகள் வருகின்றன. இவை சாலையில் அங்கும், இங்கும் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்துகிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்