சாலை ஓரத்தில் குப்பைகள்

Update: 2022-08-05 16:40 GMT

கொடைரோடு அருகே நான்கு வழிச்சாலையின் ஓரத்தில் குப்பைகள், கழிவுகள் கொட்டி குவிக்கப்படுகின்றன. தற்போது மழை காலமாக இருப்பதால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. பாதசாரிகள், வாகனங்களில் செல்வோர் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலை உள்ளது. சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்